கடந்த ஏப்ரல் 2-ம் தேதி…
உலகமே அதிர்ந்த நாள் என்றே சொல்லலாம்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் சொன்னதுபோல, ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளை தவிர்த்து, அனைத்து நாடுகளுக்கும் பரஸ்பர வரி விதித்தார்.
அதன்படி, இந்தியாவிற்கு 27 சதவிகித வரி விதிக்கப்பட்டது.
இந்த வரி ஏப்ரல் 9-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
à¯https://twitter.com/TruthTrumpPosts/status/1910020628410945729à®
வரி விதிப்பு மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகியவற்றைக் கண்டு பயந்து வியட்நாம் போன்ற நாடுகள் தாங்கள் அமெரிக்க பொருட்களின் மேல் விதிக்கும் வரியை ரத்து செய்வதாக அறிவித்தன.
மேலும், 75 நாடுகள் பரஸ்பர வரி குறித்து அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியா இந்த வரி குறித்து வாயை திறக்கவே இல்லை.
சீனா மட்டும் அமெரிக்காவிற்கு எதிராக கடுமையான எதிர்வினை ஆற்றியது. சீனா அமெரிக்கா பொருட்கள் மீது 84 சதவிகித வரி விதித்தது. பேச்சுவார்த்தை, மிரட்டல் என ட்ரம்ப் எவ்வளவோ தூது விட்டும் சீனா கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை.

