Last Updated:
கடந்த 31-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 9 கோடியே 19 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்கள்.
இந்தியாவில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கும் நபர்கள் எத்தனை பேர் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் ஆடம்பரமான வீடுகள், கார்கள், செல்வ செழிப்புடன் வாழும் மக்களை பார்க்க முடிகிறது. ஒவ்வொரு நகரங்களிலும் ஏராளமான கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
அதன் அடிப்படையில் 140 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில் லட்சக்கணக்கானோர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால், துல்லியமாக இந்தியாவில் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக எத்தனை பேர் சம்பாதிக்கிறார்கள் என்கிற விவரம் வருமான வரித்துறை இணையதளத்தில் கிடைக்கின்றன.
கடந்த மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் வருமானம் கிடைப்பதாக 3 லட்சத்து 24 பேர் வருமானவரி தாக்கல் செய்துள்ளனர். அதாவது, இந்தியாவில் 3 லட்சத்து 24 ஆயிரம் பேர் மட்டுமே தங்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைப்பதாக ஒப்புக்கொள்கின்றனர்.
இந்த தனி நபர்களுடன் நிறுவனங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்க்கும்போது இந்த எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரம் என தெரிய வந்துள்ளது. கடந்த 31-ஆம் தேதி நிலவரப்படி நாட்டில் 9 கோடியே 19 லட்சம் பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளார்கள்.
அதிக வருமானம் உடையவர்களில் 2.97 லட்சம்பேர் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுகிறார்கள். 5 கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை வருமானம் பெற்றவர்களின் எண்ணிக்கை 16,797 ஆக உள்ளது. 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 10,184 ஆக பதிவாகியுள்ளது.
April 09, 2025 4:31 PM IST
இந்தியாவில் ரூ. 1 கோடிக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் எத்தனைபேர்? வருமான வரி இணையதளத்தில் வெளியான தகவல்


