Last Updated:
அமித்ஷா ரைசிங் பாரத் 2025 மாநாட்டில், “தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது” என உறுதி அளித்தார். ஊழலை மறைக்க திமுக பிரச்சனை எழுப்புகிறது என்றும் கூறினார்.
நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2025-ல் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தமிழ்நாட்டில் அவர்களின் ஊழலை மறைப்பதற்கு தொகுதி மறுவரை பிரச்சனையை எழுப்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
நியூஸ் 18 குழுமம் நடத்தும் ரைசிங் பாரத் (Rising Bharat) மாநாடு 2025 டெல்லியில் 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், மொத்தம் 100க்கும் மேற்பட்ட தலைவர்கள், 75க்கும் மேற்பட்ட அமர்வுகளில் உரையாற்றி வருகின்றனர்.
அந்தவகையில் இன்று (9ஆம் தேதி) நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “தொகுதி மறுவரை குறித்து ஹிமாச்சல் பிரதேசத்திலோ அல்லது இந்தியா கூட்டணி ஆட்சியில் இருக்கும் எந்த மாநிலத்திலாவது ஏதாவது நடக்கிறதா என்றால் இல்லை. அரசு தொகுதி மறுவரை ஆணையத்தை அறிவித்துள்ளதா அல்லது உச்ச நீதிபதியை நியமித்துள்ளதா? ஆனால், தமிழ்நாட்டில் அவர்களின் ஊழலை மறைப்பதற்கு தொகுதி மறுவரை பிரச்சனையை எழுப்புகிறார்கள். தென்னிந்தியாவிற்கு பாஜக அநீதி இழைக்காது என்றும், ப்ரோ ரேட்டா அடிப்படையில், தொகுதிகள் தக்கவைக்கப்படும் என்பதை உறுதி அளிக்கிறேன். தொகுதி மறுவரையால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது.
இதையும் படியுங்கள் : சென்னை வரும் அமித்ஷா! எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க திட்டம்?
அவர்கள் இந்தச் சத்தத்தை நிறுத்தினால், ஊழல் குறித்தும், வாரிசு அரசியல் குறித்தும் பதில் சொல்ல வேண்டிவரும். சட்டத்தின் அடிப்படையில், தொகுதி மறுவரை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கொண்டுவரப்படும் மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும். ஒருவேளை அது நாடாளுமன்ற குழுவுக்கும் கூட அனுப்பப்படலாம். எனவே இப்போதே அவர்கள் கூச்சலிடுவது ஏன்?
“பிரிவினையை விரும்பியவர்கள் காங்கிரஸ் அரசியல்வாதிகள் தான், சாமானிய இஸ்லாமியர்கள் அல்ல. பிரதமர் சரியாகத்தான் கூறியுள்ளார். தற்போதும் காங்கிரஸ் பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. மத்திய அரசு அனைத்து மொழிகளையும் ஒன்றாகத் தான் பார்க்கிறது; இந்தியை மட்டும் ஊக்குவிக்க நினைக்கவில்லை. திமுகவின் ஒரு தலைவருக்குக்கூட தமிழில் கையெழுத்து போடத் தெரியாது” எனப் பேசினார்.
April 09, 2025 10:26 PM IST


