பர்சனல் லோன்களுக்கான வட்டியை சரியாக திரும்ப செலுத்தாத நபர்கள் பொருளாதார மற்றும் சட்டரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும். பர்சனல் லோன் என்பது தனி நபர்களின் அவசரகால தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவக்கூடிய ஒரு வகையான தனிநபர் கடன் திட்டம். வழக்கமான முறையில் தனிநபர் கடன்களுக்கு எந்த ஒரு அடமானமும் வாங்கப்படுவது கிடையாது. இந்த சூழ்நிலையில் கடன் வழங்குநர்கள் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பர்சனல் லோன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பொருளாதார விளைவுகள்: கிரெடிட் ஸ்கோருக்கு ஏற்படக்கூடிய சேதம்:
பர்சனல் லோன்களுக்கான ஒரு பேமென்டை நீங்கள் செலுத்த தவறிவிட்டால் கூட, அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைத்துவிடும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் கடன் வாங்குவதில் சிரமம் ஏற்படலாம். பர்சனல் லோன்களை நீங்கள் சரியாக திருப்பி செலுத்தாவிட்டால் கடன் வழங்குநர்கள் கிரெடிட் பீரோவிடம் கோரிக்கை விடுத்து, உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை குறைக்க சொல்லி கேட்பார்கள். உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் ஒருமுறை குறைந்து விட்டால் அதனை மீண்டும் அதிகரிப்பது மிகவும் கடினம்.
அபராதங்கள்:
பர்சனல் லோன்களை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தாவிட்டால் அதற்கு நீங்கள் அபராதங்களை செலுத்த நேரிடும். இது நீங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை மேலும் அதிகரிக்கும்.
அதிக வட்டி:
நீங்கள் செலுத்தாத பணத்திற்கு மென்மேலும் வட்டி விதிக்கப்பட்டு, இறுதியாக நீங்கள் கடனாக செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருக்கும். மேலும், உங்களுடைய வழக்கை கடன் வழங்குநர்கள் கலெக்ஷன் ஏஜென்ஸிக்கு டிரான்ஸ்பர் செய்யலாம்.
இதையும் படிக்க: Credit score | குறைவான அல்லது கிரெடிட் ஸ்கோர் இல்லாதவர்கள் வலிமையான கிரெடிட் ப்ரொபைலை உருவாக்க என்ன செய்யலாம்…? டிப்ஸ் இதோ…!
சட்டரீதியான விளைவுகள்: சட்டரீதியான நடவடிக்கை:
கடனை திருப்பி செலுத்த தவறிவிட்டால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உங்களுடைய சொத்துக்கள் அபகரிக்கப்படலாம்.
கடனை உடனடியாக செலுத்த கட்டாயப்படுத்துதல்:
ஒருவேளை நீங்கள் பர்சனல் லோன்களுக்கான பேமெண்ட்களை சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால் கடன் வழங்குநர்கள் மொத்த கடன் தொகையையும் உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செய்ய தவறிவிட்டால் உங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறுவார்கள்.
அடமானத்தை இழப்பீர்கள்:
ஒருவேளை அது செக்யூர்டு லோனாக இருந்தால் நீங்கள் அடமானமாக கொடுத்த சொத்து அபகரிக்கப்படும்.
இதையும் படிக்க: SIP vs SSY: வருடத்திற்கு ₹12,000 முதலீடு செய்வதால் கிடைக்கும் ரிட்டன் எவ்வளவு தெரியுமா…?
இந்தியாவில் தனிநபர் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் திவாலா கடன் தாக்கல் செய்வதற்கு கடன் வழங்குநர் என்ன செய்ய வேண்டும்?
திவாலா கடன் தாக்கல் செய்வதற்கான செயல்முறை என்பது மிகவும் நீளமானது மற்றும் சற்று சிக்கலானது. இதற்கு கடன் வழங்குநர் நேஷனல் கம்பெனி லா டிரிப்யூனல் (NCLT)-யிடம் ஒரு பெட்டிஷன் தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
April 08, 2025 1:09 PM IST
Personal loan | பர்சனல் லோன் பேமென்ட் செலுத்த தவறினால் ஏற்படும் சட்டரீதியான நடவடிக்கைகளும், அபராதங்களும்…!

