Last Updated:
இந்த போட்டி கொல்கத்தாவில் நடந்ததால், அதிகம் வந்திருந்த கொல்கத்தா ரசிகர்கள் ஷர்துல் ஓவரை ஆரவாரம் எழுப்பி ரசித்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஈடன் கார்டனில் நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த மேட்ச்சில் லக்னோ அணியின் ஷர்துல் தாகூர் ஒரே ஓவரில் தொடர்ந்து 5 பந்துகளை வைட் பாலாக வீசினார். இது லக்னோ ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இன்றைய ஆட்டத்தில் டாஸ் வெற்றி பெற்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்யா ரஹானே பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் 47 ரன்களும், மிட்செல் மார்ஷ் 81 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
நிகோலஸ் பூரன் 8 சிக்சர் 7 பவுண்டரியுடன் 20 ஓவர்கள் வரையும் களத்தில் நின்றார். 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த லக்னோ அணி 238 ரன்கள் குவித்தது. இதையடுத்து 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியில், பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.
குவின்டன் டி காக் 15 ரன்களும், சுனில் நரேன் 30 ரன்களும் சேர்க்க கேப்டன் ரஹானே அதிரடியாக 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். வெங்கடேஷ் ஐயர் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசி ஓவர்களில் ரின்கு சிங் சிக்சரும், ஃபோருமாக பறக்கவிட, கொல்கத்தா வெற்றி பெறும் என்ற சூழல் ஏற்பட்டது.
இறுதியில் 7 விக்கெட் இழந்த அந்த அணி 234 ரன்கள் எடுத்து வெறும் 4 ரன்களில் வெற்றியை தவற விட்டது. 2 ஆவதாக லக்னோ பந்துவீசும்போது, சற்று பதற்றத்துடனேயே பவுலர்கள் பந்து வீசினர்.
12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு இன்னும் 86 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், 13 ஆவது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் தொடர்ச்சியாக 5 வைட் பால்களை வீசினார். இது லக்னோ ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
அதே நேரம் இந்த போட்டி கொல்கத்தாவில் நடந்ததால், அதிகம் வந்திருந்த கொல்கத்தா ரசிகர்கள் ஷர்துல் ஓவரை ஆரவாரம் எழுப்பி ரசித்தனர்.
April 08, 2025 10:50 PM IST


