என்ன நடந்தது?
விக்ரமாதித்ய யாதவ் என்ற இயற்பெயர் கொண்ட மேற்கண்ட நபர் பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். அவரது தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

