மத்திய அரசு உயர்த்தியுள்ள கூடுதல் கலால் வரி விதிப்பு இன்று நள்ளிரவு ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலையை பொருத்தளவில் சென்னையில் இன்று (ஏப்ரல் 7) பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 100.80 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் ரூ. 100.93 என்ற அளவில் விற்பனையாகி வந்த நிலையில், இன்று லிட்டருக்கு 13 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று டீசல் விலை சென்னையில் லிட்டருக்கு ரூ. 92.39 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. இந்த சூழலில் கலால் வரி உயர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் கலால் வரி உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க – ரூ.10, ரூ.500 நோட்டுக்களில் வரப்போகும் மாற்றம்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!
இந்நிலையில் கலால் வரி உயர்த்தப்பட்டாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்காது என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
PSU Oil Marketing Companies have informed that there will be no increase in retail prices of #Petrol and #Diesel, subsequent to the increase effected in Excise Duty Rates today.#MoPNG
— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) April 7, 2025
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியம் மற்றும் கேஸ் அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில், ‘கலால் வரி உயர்த்தப்பட்டபோதிலும், எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இருக்காது என்று தெரிவித்துள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபற்றி பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் அளித்த பேட்டியில், கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் என்றும் சில்லறை விற்பனையில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
April 07, 2025 4:21 PM IST

