• Login
Tuesday, May 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

உயிருக்கு பயந்து, தனது மனைவியை அவரது காதலனுடன் சேர்த்துவைத்த நபர்… இறுதியில் நடந்த டிவிஸ்ட் இதுதான்…!

GenevaTimes by GenevaTimes
April 5, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
உயிருக்கு பயந்து, தனது மனைவியை அவரது காதலனுடன் சேர்த்துவைத்த நபர்… இறுதியில் நடந்த டிவிஸ்ட் இதுதான்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஏற்கனவே நம்பமுடியாத வகையில் இருக்கும் இந்தக் கதையில் தற்போது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை அவரது புதிய மாமியார் திருப்பி அனுப்பியுள்ளார். அவர் தனது முதல் கணவருடன் பெற்ற இரண்டு குழந்தைகளுக்காக வருத்தப்படுவதாகவும், அவர்கள் தங்கள் தாயின் அன்பைப் பெறுவதை உறுதி செய்ய விரும்புவதாகவும் மாமியார் கூறுகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் சாந்த் கபீர் நகரில் உள்ள கட்டார் ஜோட் கிராமத்தைச் சேர்ந்த பப்லு, கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகாவை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். வேறொரு மாநிலத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்யும் பப்லுக்கு, அவரது மனைவி ஒன்றரை வருடங்களாக அதே கிராமத்தைச் சேர்ந்த விகாஸ் என்ற மற்றொரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பப்லு கட்டார் ஜோட்டுக்குச் சென்று உண்மையைத் தானே கண்டறிய முடிவு செய்தார்.

சில நாட்கள் ராதிகாவை கண்காணித்த பப்லு, கிராமத்தினர் கூறிய வதந்திகள் உண்மை என்றும், தனது மனைவி விகாஸை ரகசியமாக சந்தித்து வருவதையும் கண்டுபிடித்தார். ராதிகாவுடன் வாக்குவாதம் செய்வதாலோ அல்லது அவள் தன்னை ஏமாற்றுவதைத் தடுக்க முயற்சிப்பதாலோ எந்தப் பலனும் கிடைக்காது என்று முடிவு செய்த பப்லு, அவளுக்கும் விகாஸுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். மேலும் எட்டு மற்றும் ஐந்து வயதுடைய இரண்டு குழந்தைகளை தானே கவனித்துக் கொள்வதாகவும் அறிவித்தார்.

தனது குழந்தைகள் மற்றும் பிற கிராமவாசிகளால் சூழப்பட்ட ராதிகா, விகாஸை மணக்கும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இருவரும் மாலைகளை மாற்றிக்கொண்ட பிறகு விகாஸ், ராதிகாவின் நெற்றியில் குங்குமம் வைப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. திருமணத்திற்குப் பிறகு பப்லு தம்பதியினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, இந்த திருமணத்தை சட்டப்பூர்வமாக்க சாட்சியாகவும் இருந்தார்.

ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று பப்லுவிடம் கேட்டபோது, ​​”எனக்கு ஏற்படக்கூடிய தீங்குகளைத் தவிர்ப்பதற்காக நான் அவர்களின் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடிவு செய்தேன். சமீபத்திய நாட்களில், கணவர்கள் தங்கள் மனைவிகளால் கொல்லப்படுவதைக் காண்கிறோம். மீரட்டில் நடந்ததைப் பார்த்த பிறகு, நாங்கள் இருவரும் நிம்மதியாக வாழ என் மனைவியை அவளுடைய காதலனுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தேன்” என்று கூறியிருந்தார்.

Latest and Breaking News on NDTV

மனமாற்றம்?

கோரக்பூரில் உள்ள விகாஸின் வீட்டிற்குச் சென்ற சில நாட்களுக்குப் பிறகு, ராதிகாவை அவரது மாமியார் பப்லுவிடம் திரும்பச் செல்லுமாறு கூறியுள்ளார். ஏனென்றால், பப்லுவின் இளம் குழந்தைகள் தாய் இல்லாமல் வளர்க்கப்படுவதை மாமியார் விரும்பவில்லை. இதற்கு ராதிகா சம்மதித்தது மட்டுமல்லாமல், பப்லுவும் அதை ஏற்றுக்கொண்டார்.

ராதிகாவும் இரு குழந்தைகளும் அருகில் நிற்க, “ஆம், அவள் வேறொருவரை மணந்தாள். அவள் அப்பாவி. நான் அவளைத் திரும்ப அழைத்துச் செல்கிறேன். இனிமேல் அவளுக்கு என்ன நடந்தாலும் அதற்கு நான் பொறுப்பாவேன். நாங்கள் இனி குடும்பமாக சேர்ந்து வாழ்வோம்” என்கிறார் பப்லு.

இதையும் படிக்க: “தனது குழந்தைகளை இந்தியாவில் வளர்ப்பதற்கு ஏன் முன்னுரிமை அளிக்கிறேன்…?” காரணங்களை பட்டியலிடும் அமெரிக்கப் பெண்…!

கொலைகள்

கடந்த மாதம் மீரட்டில் முன்னாள் வணிக கடற்படை அதிகாரியான தனது கணவர் சௌரப்பை, மனைவி முஸ்கனும், அவரது காதலர் சாஹிலும் போதைப்பொருள் கொடுத்து கொன்று, அவரது உடலை வெட்டி, சிமென்ட் பூசப்பட்ட டிரம்மில் வீசியது நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கணவரின் உடலை அப்படியே டிரம்மில் விட்டுவிட்டு, முஸ்கனும் சாஹிலும் சிம்லா மற்றும் மணாலிக்குச் சென்று அங்கு ஹோலியைக் கொண்டாடினர்.

அவுரியாவில், 22 வயதான பிரகதி யாதவ் மற்றும் அவரது காதலர், பெற்றோர் கட்டாயத்திற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட கணவர் திலீப்பை கொல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒரு ஒப்பந்தக் கொலையாளியை வேலைக்கு அமர்த்தியது இந்த ஜோடி. மார்ச் 19 அன்று திலீப் ஒரு வயலில் துப்பாக்கி குண்டு காயங்களுடன் கிடந்தார். 25 வயதான அவர் மறுநாள் மருத்துவமனையில் இறந்தார்.

First Published :

April 05, 2025 6:11 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

உயிருக்கு பயந்து, தனது மனைவியை அவரது காதலனுடன் சேர்த்துவைத்த நபர்… இறுதியில் நடந்த டிவிஸ்ட் இதுதான்…!

Read More

Previous Post

Tamilmirror Online || மோடிக்கு ’ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண’ விருது

Next Post

IPL 2025 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது

Next Post
IPL 2025 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது

IPL 2025 : சென்னை அணிக்கு ஹாட்ரிக் தோல்வி.. ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியிடம் வீழ்ந்தது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin