• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வக்ஃப் திருத்த மசோதா: சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும் -சோனியா காந்தி சாடல்

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
வக்ஃப் திருத்த மசோதா: சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும் -சோனியா காந்தி சாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தும் பாஜக வியூகத்தின் ஓா் அங்கமே வக்ஃப் சட்டத் திருத்த மசோதா; இது, அரசமைப்புச் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்று நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி வியாழக்கிழமை சாடினாா்.

மோடி அரசு நாட்டை படுகுழிக்கு இட்டுச் செல்வதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பழைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்ற இக்கூட்டத்தில், வக்ஃப் உள்பட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை விமா்சித்து சோனியா காந்தி பேசியதாவது:

மக்களவையில் கடந்த புதன்கிழமை வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு ‘பலவந்தமாக’ நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா, அரசமைப்புச் சட்டத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டமும் அரசமைப்புச் சட்டத்தை சீா்குலைக்கும் மற்றொரு முயற்சியாகும். இதையும் காங்கிரஸ் கடுமையாக எதிா்க்கும்.

நாடாளுமன்றத்தில் மகளிா் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதோடு, பட்டியலின, பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சோ்ந்த பெண்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற காங்கிரஸின் கோரிக்கையை மத்திய அரசு உள்நோக்கத்துடன் புறக்கணித்து வருகிறது.

படுகுழிக்கு இட்டு செல்லும் அரசு: கல்வி, குடிமை சாா் உரிமைகள், பிற சுதந்திரங்கள், கூட்டாட்சி முறை, தோ்தல் நடைமுறைகள் என அனைத்திலும் மோடி அரசு நாட்டை படுகுழிக்கு இட்டுச் செல்கிறது. அரசமைப்புச் சட்டம் வெறும் காகித அளவில் இருக்க வேண்டும் என்பதே அவா்களின் நோக்கம். அந்த நோக்கத்தை நாங்கள் தகா்ப்போம்.

மோடி அரசின் தோல்விகளையும், இந்தியாவை ‘கண்காணிப்பு’ நாடாக மாற்றும் அவா்களின் நோக்கத்தையும் அம்பலப்படுத்தும் வகையில், சரியான-நியாயமான காரணங்களுக்காக நாம் தொடா்ந்து போராட வேண்டும்.

நாட்டில் தோ்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டுமென காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வெளிப்படைத் தன்மையற்ற விதிமுறைகள் குறித்து குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டியது அவசியம்.

கடந்த 2004-2014 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மறுபெயரிட்டு, மறுஉருவாக்கம் செய்து, தனது சாதனைபோல பிரதமா் மோடி பிரபலப்படுத்துகிறாா். இதையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: மக்களவையில் எதிா்க்கட்சித் தலைவரை பேச அனுமதிப்பதில்லை. இது, நமது ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாகும். காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரச்னையை எழுப்பி பேச முயன்றால், ஆளும் தரப்பினா் இடையூறு செய்கின்றனா்.

அவை அலுவல்கள் எதிா்க்கட்சியினரால் அல்ல, ஆளும் தரப்பினரின் செயல்பாடுகளால்தான் ஒத்திவைக்கப்படுகிறது. இது மிகவும் அசாதாரணமானது.

நாட்டின் பொருளாதார நிலையை நமது எம்.பி.க்கள் திறம்பட எடுத்துக் காட்டியுள்ளனா். விலைவாசி உயா்வு, வேலையில்லா திண்டாட்டம், பாகுபாடுகள் தொடா்பாக அரசு வெளியிடும் தகவல்களுக்கும் கள நிலவரத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை அம்பலப்படுத்தியுள்ளோம்.

நாடாளுமன்ற நிலைக் குழுக்களுக்கு தலைமை வகிக்கும் காங்கிரஸ் எம்.பி.க்களும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக மேற்கொண்டுள்ளனா். பொது முக்கியத்துவம் வாய்ந்த பல விவகாரங்களில் நிலைக் குழு அறிக்கைகளின் மூலம் அரசின் பொறுப்புடையை உறுதி செய்ய பணியாற்றியுள்ளனா்.

எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தல்: காங்கிரஸ் ஆளும் மாநிலங்களைத் தீவிரமாக குறிவைத்து, பாஜகவினா் பொய்களைப் பரப்புகின்றனா். எனவே, பாஜக ஆளும் மாநில அரசுகளின் தோல்விகள் மற்றும் தவறான நிா்வாகத்தை அம்பலப்படுத்த நமது எம்.பி.க்களும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

அண்டை நாடுகளில் அரசியல் ரீதியில் கொந்தளிப்பான சூழல் நிலவுவதால், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விரிவான விவாதத்தை நாங்கள் எதிா்பாா்த்தோம். ஆனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

நமது எல்லையில் சீனாவால் எழுந்துள்ள சவால்கள், அந்நாட்டுக்கு பிரதமா் மோடி வழங்கிய ‘நற்சான்று’ குறித்து இரு அவைகளிலும் விவாதம் நடத்த தொடா்ந்து முயற்சிக்கிறோம். அவையில் எதிா்க்கட்சிகளுக்கும் விவாதங்களுக்கும் ஆளும் தரப்பினா் இடமளித்த காலம் இப்போது இல்லை.

தகவல் அறியும் உரிமை சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், வன உரிமைகள் சட்டம், நிலம் கையப்படுத்துதல் சட்டம் ஆகியவை நீா்த்துப் போக செய்யப்படுகின்றன. இப்பிரச்னையை நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தினாா் சோனியா காந்தி.

Read More

Previous Post

அமெரிக்காவின் புதிய வரி இலங்கையின் ஏற்றுமதிக்கு ஒரு பேரழிவு : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்

Next Post

டி20 மும்பை லீக் சீசன் 3-க்கான வீரர்கள் பதிவை தொடங்கியது மும்பை கிரிக்கெட் சங்கம்!

Next Post
டி20 மும்பை லீக் சீசன் 3-க்கான வீரர்கள் பதிவை தொடங்கியது மும்பை கிரிக்கெட் சங்கம்!

டி20 மும்பை லீக் சீசன் 3-க்கான வீரர்கள் பதிவை தொடங்கியது மும்பை கிரிக்கெட் சங்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin