Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து பாங்காக்கில் உற்சாக வரவேற்பு பெற்றார். 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் அவர், பல நினைவு பரிசுகளை பெற்றார்.
தாய்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு தலைநகர் பாங்காக்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் பெடோங்டர்ன் ஷினவத்ரா அழைப்பை ஏற்று, 2 நாள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, 6வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். அண்மையில் நிலநடுக்கத்தால் தாய்லாந்து கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடி அங்கு சென்றுள்ளார். தலைநகர் பாங்காக்குக்கு இன்று சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தாய்லாந்து ராணுவத்தின் அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து விமான நிலையத்தில் திரண்டு இருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். உள்ளூர் மக்கள் குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற கார்பா நடனம் மூலம் பிரதமர் மோடியை வரவேற்றனர். கார்பா நடனத்தை கைகளை தட்டி பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
Highlights from Bangkok…a vibrant welcome, community connect and the Ramayan! pic.twitter.com/cPyqQ1urVX
— Narendra Modi (@narendramodi) April 3, 2025
மேலும், சீக்கிய மக்கள் பிரதமர் மோடிக்கு பொற்கோவில் மாதிரியை பரிசாக வழங்கினர். இஸ்கான் அமைப்பு சார்பில் பிரதமருக்கு பகவத் கீதை பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஜெயின் சமூகத்தினர் உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு பல்வேறு நினைவு பரிசுகளை வழங்கினர். தொடர்ந்து தாய்லாந்து பதிப்பு ராமாயணத்தை பிரதமர் மோடி கண்டு ரசித்தார்.
April 03, 2025 6:38 PM IST