Last Updated:
போதைப் பழக்கத்திற்கு அடிமையான மகனுக்கு பாடம் புகட்டும் வகையில் தாய் செய்துள்ள இந்த செயல் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.
போதைப்பழக்கத்திற்கு அடிமையான மகனைத் தாயே போலீசில் ஒப்படைத்திருப்பது கோழிக்கோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் எலத்தூர் பகுதியில் ஒரு தாய் அவரது 26 வயது மகனுடன் அவரது அம்மா வீட்டில் வசித்து வருகிறார். போதைப்பழக்கத்திற்கு அடிமையான ராகுல் அடிக்கடி போதையில் வீட்டில் உள்ளவர்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
13 வயது முதல் போதைப் பழக்கத்திற்கு அடிமையான ராகுலை 19 வயதில் மறுவாழ்வு மையத்திலும் சேர்த்திருந்ததாகக் கூறப்படுகிறது. மீண்டும் வீட்டிற்கு வந்த பின்னர் போதைப்பழக்கத்தைத் தொடர்ந்த ராகுல் வீட்டிலுள்ளவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Summer Vacation: சம்மர் ஹாலிடே என்ஜாய் பண்ண பெஸ்ட் ஸ்பாட்… நீலகிரியில் மிஸ் பண்ண கூடாத 10 ஸ்பாட்…
குடிக்கப் பணம் கொடுக்காததால் வீட்டிலுள்ள குழந்தையை அடித்ததற்காக ஏற்கனவே போலீசில் ராகுல் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் தாய், பாட்டியைக் கொலை செய்து விடுவதாகவும், வெளிநாட்டிலுள்ள சகோதரியைக் கொலை செய்யவுள்ளதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பொறுமையிழந்த தாய் ராகுலை போலீஸில் ஒப்படைத்துள்ளார்.
ராகுல் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதாகவும், மூன்று முறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். எலத்தூர் முதன்மை எஸ்.ஐ. முகமது ஜியாத் தலைமையில் ராகுல் காவலில் எடுக்கப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது இடுக்கி மாவட்டங்களில் உள்ள கோழிக்கோடு, தாமரச்சேரி, கூராச்சுண்டு மற்றும் பீருமேடு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 03, 2025 12:47 PM IST