இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) நாளை 4ம் திகதி முதல் 6ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.
இந்நிலையில், இலங்கை பாதுகாப்பு நிறுவனங்களை ஒருங்கிணைக்க இந்தியாவில் இருந்து ஒரு மேம்பட்ட பாதுகாப்புக் குழு கொழும்புக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இந்தியப் பிரதமரின் வருகையின் போது கொழும்பு மற்றும் அனுராதபுரத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம்
இந்தப் பயணத்தின் போது பாதுகாப்பு விடயங்களில் அதிக கவனம் செலுத்துவதை உறுதி செய்ய காவல்துறையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
My visit to Sri Lanka will take place from the 4th till the 6th. This visit comes after the successful visit of President Anura Kumara Dissanayake to India. We will review the multifaceted India-Sri Lanka friendship and discuss newer avenues of cooperation. I look forward to the…
— Narendra Modi (@narendramodi) April 3, 2025
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாளை 04ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தனது சமூக வலைத்தளக் கணக்காக எக்ஸ் (X) பக்கத்தில் தெரிவித்துள்ளார்
அந்த பதிவில், “எனது இலங்கை விஜயம் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்தியாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பயணம் வெற்றியடைந்ததன் தொடர்ச்சியாக என்னுடைய இந்த பயணம் அமைகிறது.
இந்தியா மற்றும் இலங்கை இடையேயான பன்முக தன்மை கொண்ட நட்புறவை பற்றி நாங்கள் மறுஆய்வு செய்து, ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். பல்வேறு சந்திப்புக்களை மேற்கொள்ள காத்திருக்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.