• Login
Tuesday, June 17, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ராம மந்திரத்திற்கு இவ்வளவு சக்தியா? | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ராம மந்திரத்திற்கு இவ்வளவு சக்தியா? | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆஞ்சநேயர் நித்தம் சொல்லும் ராம நாமமே மிகவும் மகத்துவமானது என முனிவர்கள், ரிஷிகள், புராணங்கள் மட்டுமல்ல இந்த உலகிற்கே தலைவனாக இருக்கக் கூடிய சிவ பெருமானே பார்வதி தேவிக்கு எடுத்து உரைத்துள்ளார்.ராமனை பற்றி எழுதும் போது ஒரு ஸ்லோகம் தவறாமல் குறிப்பிடப்படுவது உண்டு. அது சிவ பெருமானால் பார்வதி தேவிக்கு எடுத்துரைக்கப்பட்டதாகும்.

அதை உச்சாடனம் செய்வதால் வெற்றி உண்டாகும், மங்களம் உண்டாகும், பிறவி பயனைப் பெறலாம், வாழ்வில் நன்மை பயக்கும், அதுதான் ராம மந்திரம். இது பற்றி சிவ பெருமான் கூறுகையில்,”அழகிய முகமுடைய பர்வதராஜ புத்திரி! யாம் எப்போதும் ராம, ராம, ராம என்ற புண்ணியமிக்க மந்திரத்தை மனனம் புரிவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். ஏனென்று கேட்பாயானால் அப்படி ஜபிப்பதால் மாதவனின் ஆயிரம் பெயர்களையும் முறையாகச் சொல்வதற்குச் சமமாகும்” என்றுரைக்கிறார் கைலாயநாதர், இதிலிருந்தே அந்த ராம மந்திரத்தின் மகிமையை உணரலாம்.

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.”

பொருள்: ராம, ராம – ராம, ராமேதி – இந்த ராம எனும் பெயர், ரமே – மகிழ்ச்சியடைகிறேன், ராமே – பெயரைத் தியானிப்பதில், மனோரமே – ஆழ்நிலை தியானத்தில் மன நிறைவு தருகிற, சகஸ்ரநாம – விஷ்ணுவின் 1000 பெயர்களை, தத்துல்யம் – சொல்வதற்கு ஈடாகும். ராம நாம – பவித்திரமான ராமசந்திர மூர்த்தியின் ராம எனும் பெயர், வர – அழகிய, ஆனனே – முகம் கொண்டவனே.

சுயநலமற்ற செயல்களால் தன் தானை தலைவன் ராமச்சந்திர மூர்த்தியாலேயே சிரஞ்சீவியாகத் திகழ வரம் பெற்றவர். திரேதா யுகத்தில் ராம நாமம் ஜபித்தவாறு ராமனுக்குத் தாசனாய் இருந்தவர். துவாபர யுகத்தில், கிருஷ்ணர் அர்ஜுனனுடனிருந்து அதே பாக்கியத்தைப் பெற்றவர். கலியுகத்திலும் ராம காதை பிரவசனம் செய்யுமிடத்திலும், ராமநாமம் கேட்குமிடமெல்லாம் ராமனை நேரில் தரிசிக்க முயற்சித்துச் சுற்றிச் சுற்றி வருகிறார். அப்படிபட்ட மாருதிராயனை ஒருமுறை சோதிக்க எண்ணினார் மூவுலகைச் சுற்றும் விசேஷ தேவதூதர் நாரதமுனி.

இலங்கை யுத்தம் முடிந்து அயோத்தி நகர் திரும்பிய ராமர், வெற்றி விழா மற்றும் பட்டாபிஷேகக் கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு அரச சபையில் ரிஷி, முனிவர்கள் கூடியிருந்தனர். நாராயணா, நாராயணா என்ற கோஷத்துடன் நாரதரும் வந்து சேர்ந்தார். அனைத்து மகான்களையும் வணங்கியவரின் பார்வை, பவ்யமாக அங்கு நின்றிருந்த ஆஞ்சநேயரின் மீது விழுந்தது. குறும்புச் சிரிப்புடன் நெருங்கியவர், அஞ்சனை மைந்தா, போர்க் களத்தில் தசரத ராமனுக்கு நீ ஆற்றியப் பணி மிகச் சிறப்பானது, இதோ இங்கே குழுமியிருக்கும் மகான்களிடம் ஆசி பெற்றுக் கொண்டாயா, இல்லையா? என்று கேட்டு வேலையைக் காட்ட ஆரம்பித்தனர். அதற்குத் தான் காத்திருக்கிறேன் தாங்களும் வந்து சேர்ந்துவிட்டீர், தேவ ரிஷி! இதோ போகிறேன் என நகரலானான் அனுமன்.

அனுமனும் அவ்வாறே செய்து முடித்தான். விஸ்வாமித்திரர் சிறிதும் சலனப்படவில்லை. ஆனால் அவர் தனிமையில் இருக்கையில் நாரதர் அவரிடம் அனுமனின் அடாத நடவடிக்கையை எடுத்துக் கூறி மகரிஷிக்கு கோபம் ஏற்பட வைத்து, நன்றாகச் சிண்டு முடியும் வேலையையும் கனகச்சிதமாகச் செய்து விட்டார். ராமனிடம் இதைச் சொன்ன ரிஷி, ஆஞ்சநேயருக்குத் தகுந்த படிப்பினை வழங்க உத்தர விட்டார். தர்மம், நீதியை நிலைநாட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்ட ராமன், தன் குருவுக்கு நேர்ந்த மரியாதைக் குறைவுக்கு மரண தண்டனையே ஏற்றது என தீர்மானித்து, அனுமனை அம்பெய்து கொல்ல ஆணையிட்டான்.

சற்றும் சிந்திக்காமல் எடுப்பார் கைப்பிள்ளையாதான் நடந்து கொண்டு விட்டதை எண்ணி வருத்த முற்ற ஆஞ்சநேயர், ராமச்சந்திர பிரபுவின் பாதங்களைச் சரணடைவதே உகந்தது என்று கருதி ராம, ராம, ராம எனத் தியானிக்கத் தொடங்கினார். அந்தத் தெய்வீக ஒலி எங்கும் வியாபித்தது. வில்லாளிகளின் கூரிய கணைகள் அனுமனுக்குத் தீங்கொன்றும் இழைக்க முடியாமல் மழுங்கி வீழ்ந்தன! முடிவில் தாசனுக்குத் தானே தண்டனை வழங்க முன் வந்தார் ராமன். முன்னாளில் வாலியைக் கொன்ற அவரது அம்புகள் இப்போது மாருதியின் முன் செயலிழந்து போயின. ராமன் சற்று திகைத்து தான் போனார். ஒரு முடிவுக்கு வந்தவர் குரு விஸ்வா மித்ரரின் அனுமதி பெற்று பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தார். அனுமன் உச்சரித்த ராமநாம மந்திர ஒலி அதிர்வலைகளுக்கு முன், பயங்கர அழிவை உண்டாக்கும் அந்த அஸ்திரம் கட்டுண்டு நின்று அதில் அவிழ்ந்தும் போயிற்று!

பிரம்மாஸ்திரத்தை வலுவிழக்க வைக்கும் பிரம்மசீர்ஷ அஸ்திரம், அதையும் முறியடிக்கும் பிரம்மாண்ட அஸ்திரம் ஆகியவற்றுக்கும் இதே கதிதான் ஏற்படும் என்பது நிதரிசனமாக புரிந்து விட்டது. ராம் என்ற மந்திர ஒலி அதிர்வுகள் அனுமனை அரண் போல் காத்து நின்றன என்பதே உண்மை, நமக்கு இப்படிப்பட்ட ஒரு தாசனா என்று நெகிழ்ந்து விட்ட ராமன் அனுமனை ஆரத் தழுவிக் கொண்டார். தன்னை வணங்கிய ஆஞ்சநேயருக்கு மனமுவந்து ஆசி வழங்கினார், கவுசிகர். இதை பார்த்த நாரதர், சமாதானம் செய்யும் நோக்கில் ராஜ ரிஷியை அணுகித் தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். ராம என்ற சொல் புனிதமான ஓம் என்னும் மந்திரத்திற்கு சமமானது. ஒருமுறை சொன்னாலே கோடி கோடி நன்மை தரும் ஆற்றல் படைத்தது ராம நாமம். எளிதாக எல்லா நன்மைகளும் பெறும் வழி அதுவே ஆகும். ஸ்ரீராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீராமரை வழிபடுவோர், ஸ்ரீராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சநேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.



Read More

Previous Post

பரஸ்பர வரி விதிப்பு என்றால்?.. வரி விதிப்பால் தமிழகத்திற்கு சிக்கலா..?

Next Post

நாளை இலங்கை வரும் மோடி – இந்தியாவில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அணி

Next Post
நாளை இலங்கை வரும் மோடி – இந்தியாவில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அணி

நாளை இலங்கை வரும் மோடி - இந்தியாவில் இருந்து களமிறக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin