• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் ஒரே ஆண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை! | Chennai ICF plant sets record by producing 3007 train coaches in a single year

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் ஒரே ஆண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை! | Chennai ICF plant sets record by producing 3007 train coaches in a single year
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னை ஐ.சி.எஃப் ஆலையில் 2024-25ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை ஐ.சி.எஃப் (ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை) திகழ்கிறது. இந்த ஆலையில் வந்தே பாரத் பெட்டிகள், எல்.எச்.பி என்னும் நவீன பெட்டிகள், ஏசி மின்சார ரயில், மெமு ரயில் பெட்டிகள் உள்பட பல்வேறு வகைகளில் 70,000-க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது வந்தே பாரத் ரயில்கள், அம்ரித் பாரத் ரயில்கள், எல்எச்பி ரயில் பெட்டிகள், ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த ஆலையில் கடந்த நிதியாண்டில் (2023-24ம் நிதியாண்டு) 2,829 பெட்டிகள் தயாரிக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு 3,000 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த ஆலையில் 2024-25-ம் நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து புதிய உற்பத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: இந்திய ரயில்வேயின் முதன்மையான பயணிகள் பெட்டிகள் தயாரிப்பு ஆலையான ஒருங்கிணைந்த பெட்டி தொழிற்சாலையில் முந்தைய உற்பத்தி சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. விநியோகிக்கப்பட்ட பவர் ரோலிங் ஸ்டாக் பெட்டிகளான 1,169 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் வந்தே பாரத் தூங்கும் வசதி பெட்டிகள்,வந்தே பாரத் சேர் கார், மின்சார, மெமு ரயில் பெட்டிகள் ஆகியவை அடங்கும். இதுதவிர, 1,838 எல்.எச்.பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நமோ பாரத் ரேபிட் ரயில் தயாரிப்பு, 21 வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு, அம்ரித் பாரத் 2.0 ரயில்கள் தயாரிப்பு உள்ளிட்டவை கடந்த நிதியாண்டில் ஐ.சி.எஃப்-ன் முக்கிய சிறப்புகள் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இச்சாதனை படைக்க உறுதுணையாக இருந்த ஐ.சி.எஃப் அதிகாரிகள், ஊழியர்களை ஐ.சி.எஃப் பொதுமேலாளர் யு.சுப்பாராவ் பாராட்டி இனிப்பு வழங்கினார்.



Read More

Previous Post

களத்துக்குள் வருவதை தோனியே முடிவு செய்கிறார்: சிஎஸ்கே பயிற்சியாளர் விளக்கம் | Dhoni himself decides when he comes on the field CSK coach explains

Next Post

எரிவாயு குழாய் தீ அணைக்கப்பட்டது – Malaysiakini

Next Post
எரிவாயு குழாய் தீ அணைக்கப்பட்டது – Malaysiakini

எரிவாயு குழாய் தீ அணைக்கப்பட்டது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin