அடுத்த ஆண்டு (2026) நாட்டில் தேங்காய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கூறுகிறது. தென்னை ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 100 மில்லியன் தேங்காய்கள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 3,000 மில்லியன் தேங்காய்கள் தேவைப்படுகின்றன.
மேலும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக, 200 மில்லியன் தேங்காய்களுக்கு சமமான தேங்காய் பால், தேங்காய் பவுடர் மற்றும் குளிர்ந்த தேங்காய் கூழ் ஆகியவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கணிசமாக குறைவடைந்துள்ள தேங்காய் உற்பத்தி
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டின் தேங்காய் உற்பத்தி 32.3 சதவீதம் கணிசமாகக் குறைந்து 167.8 மில்லியன் தேங்காய்களாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

