மியான்மரில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தை உணர்ந்த பினாங்கு நிர்வாக கவுன்சிலர் வோங் ஹான் வாய், உயர் இரத்த அழுத்தம் காரணமாக தலைச்சுற்றல் ஏற்படுவதாக முதலில் நினைத்தார். நிலநடுக்கம் ஏற்பட்டபோது, மதியம் சுமார் 2.30 மணி. நான் கொம்தாரில் உள்ள அலுவலகத்தில் இருந்தேன். கொஞ்சம் தலைச்சுற்றல் ஏற்பட்டது. நான் மிகவும் பிஸியாக இருப்பதால் எனது உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதாக நினைத்தேன். (மாநில அரசாங்கத்தில் சுற்றுலா, படைப்பு பொருளாதார இலாகாவை வோங் கையாளுகிறார்.)
இருப்பினும், மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் கிடைத்த பிறகு அது நிலநடுக்கம் என்பதை உணர்ந்தேன். நிலநடுக்கம் பல முறை உணரப்பட்டது, ஒவ்வொரு முறையும் சில வினாடிகள் நடந்தபோது, எனது ஊழியர்களும் அந்த நடுக்கத்தை உணர்ந்தனர். இதுவரை, அலுவலகத்தில் எந்தப் பொருட்களும் சேதமடையவில்லை என்று அவர் கூறினார். ஜார்ஜ் டவுனில் உள்ள கொம்தார் உள்ளிட்ட உயரமான கட்டிடங்களில் உள்ள அலுவலக ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களும், பட்டர்வொர்த்தைச் சுற்றியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர்.
ஜார்ஜ் டவுனில் உள்ள கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியையும், பட்டர்வொர்த்தில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தையும் கண்காணிக்க தீயணைப்பு வீரர்கள், தீயணைப்பு இயந்திரங்கள் விரைந்ததாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்பு இயக்குநர் ஷோகி ஹம்சா தெரிவித்தார். இதுவரை அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எந்த அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை. உயிரிழப்புகள் அல்லது கட்டிடங்களுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. கட்டிடத்தில் ஒரு சிறிய நடுக்கம் மட்டுமே இருந்தது என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.


