‘நீங்கள் என்னை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தால்’
“நீங்கள் என்னை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தால், அதே வீரர்களைப் பயன்படுத்தி அதை பல ஆண்டுகளாக தோற்கடிக்க முடியாத அணியாக மாற்றுவேன். அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வது யார்? ஏனெனில், ரோஹித் சர்மாவை நீக்குங்கள் அல்லது கோலியை நீக்குங்கள் என அவர்களை அணியில் இருந்து தூக்கி எறிய ஒரு சிலர் எப்போதும் தயாராக இருக்கிறார்கள், ஆனால் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? நான் உங்களுடன் இருக்கிறேன் என்று அவர்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ரஞ்சி டிராபியில் விளையாடுவோம் அல்லது ரோஹித்தை 20 கி.மீ ஓட வைப்பேன் என்று அவர்களிடம் கூறுவேன். அதை யாரும் செய்வதில்லை. இந்த வீரர்கள் வைரம் போன்றவர்கள். நீங்கள் அவர்களை வெளியே தூக்கி எறிய வேண்டாம். நான் அவர்களின் தந்தையைப் போல இருப்பேன். யுவராஜுக்கும், மற்றவர்களுக்கும், தோனிக்கும் கூட நான் ஒருபோதும் வேறுபாடு காட்டியதில்லை” என்றார்.

