175 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகள் லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிடம் (CIABOC) ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆணைக்குழுவின் கோரிக்கையின் அடிப்படையில் பாராளுமன்ற அதிகாரிகள் நேற்று இந்தப் பிரகடனங்களை ஒப்படைத்தனர்.
இலங்கையின் 10வது பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 175 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த அறிவிப்புகளை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

