Last Updated:
Pollachi Goat Market: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பொள்ளாச்சி ஆட்டுச் சந்தையில் இன்று ஆயிரக்கணக்கான ஆடுகள் சுமார் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள், சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி ஆட்டுச்சந்தை வாரம் தோறும் வியாழக்கிழமை ஒருநாள் நடைபெறும். இந்நிலையில், வரும் 31ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகள் வரத்து வழக்கத்தை விட அதிகமாகக் காணப்பட்டது.
இந்த பொள்ளாச்சி சந்தைக்குச் சுற்று வட்டார பகுதிகளான ஆனைமலை, கோட்டூர், நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம், கிணத்துக்கடவு, உடுமலை என உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து வெள்ளாடு, செம்மறியாடு என இரு வகை ஆடுகள் சுமார் 1000க்கும் மேலாக விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன.
இங்கு ஆடுகளை வாங்க சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வியாபாரிகள் மட்டுமின்றி கேரளப் பகுதியிலிருந்தும் அதிகளவில் குவிந்தனர். இதில் சுமார் 8 கிலோ எடைகொண்ட ஒரு ஆடு 5,500 முதல் ரூ.6,500 வரையிலும், 20 கிலோ எடைகொண்ட ஆடு ஒன்று ரூ.16ஆயிரம் முதல் ரூ.17ஆயிரம் வரையிலும், சுமார் 25கிலோ எடைகொண்ட பெரிய அளவிலான ஆடுகள் ரூ.22ஆயிரம் வரையிலும் எனத் தரத்திற்கேற்ப இன்று விற்பனை நடைபெற்றது.
வழக்கமாக ரூ.60 லட்சத்திலிருந்து ரூ.80 லட்சம் வரை வர்த்தகம் நடை பெறுவது வழக்கம். ஆனால் தற்போது ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஆடுகள் வரத்து அதிக அளவில் வந்து உள்ளதால் வழக்கத்தை விடக் கூடுதலாகச் சுமார் 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாகத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Coimbatore,Tamil Nadu
March 27, 2025 5:19 PM IST
Ramzan Goat Sales: ரம்ஜானுக்காக சூடுபிடிக்கும் விற்பனை… பொள்ளாச்சி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடு விற்பனை…

