போலீசாரை நோக்கி இரண்டு முறை கொள்ளையர் சுட்டதில், காவல்துறை வாகனத்தின் மீது குண்டு பாய்ந்தது. தற்காப்புக்காக ஒருமுறை மட்டுமே காவல்துறையினர் சுட்டதில் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த வடமாநில கொள்ளையன் ஜாஃபர் இரானி என்பவர் உயிரிழந்தார். கொள்ளையர்கள் உடைகளை மட்டும் மாற்றிக்கொண்டார்கள். ஷூவை மாற்றவில்லை அதை வைத்து எளிதாக அவர்களை அடையாளம் காண முடிந்ததது. மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

