• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி ஐகோர்ட் நீதிபதி ‘பண’ விவகாரம் – போலீஸ் விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | Plea seeks police probe into allegations of cash found in Delhi HC judge’s residential premises

GenevaTimes by GenevaTimes
March 24, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
டெல்லி ஐகோர்ட் நீதிபதி ‘பண’ விவகாரம் – போலீஸ் விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு | Plea seeks police probe into allegations of cash found in Delhi HC judge’s residential premises
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் குடியிருப்பு வளாகத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்ற விவகாரம் தொடர்பாக காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மேத்யூஸ் ஜே. நெடும்பாரா தாக்கல் செய்த மனுவில், “மார்ச் 14 அன்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கொலீஜியத்தால் அமைக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவுக்கு அதிகார வரம்பு இல்லை. நாடாளுமன்றமோ அரசியலமைப்போ அதிகாரம் வழங்காத நிலையில், கொலீஜியம் தனக்கு அதிகார வரம்பை வழங்க முடியாது. எனவே, இத்தகைய விசாரணையை நடத்த மூவர் குழுவுக்கு அதிகாரம் வழங்கும் கொலீஜியத்தின் அறிவிப்பு ஆரம்பத்தில் இருந்தே செல்லாது.

ஒரு குற்றத்தைப் பதிவு செய்து விசாரிக்கும் அதிகாரம் மாநிலத்தின் காவல் துறைக்கே இருக்கிறது. அதன் அதிகாரத்தில் மூவர் குழு தலையிடுவதைத் தடுக்க நீதித்துறை முன்வர வேண்டும். மேலும், 1991-ஆம் ஆண்டு கே.வீராசாமி வழக்கில் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பில், இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிக்காமல், உயர் நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி மீது எந்த குற்றவியல் வழக்கும் பதிவு செய்யக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நமது அரசியலமைப்பின் மையக்கரு. ஒருவரின் நிலை, பதவி போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் சமமாகப் பொருந்தும். நமது அரசியலமைப்புச் சட்டத்தில், இறையாண்மை கொண்ட குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மட்டுமே இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் ஒருபோதும் அவ்வளவு உயர்ந்தவராக இருக்காதீர்கள். சட்டம் உங்களுக்கு மேலே உள்ளது. 1991-ஆம் ஆண்டு தீர்ப்பு காவல் துறையினரைக் கட்டுப்படுத்துகிறது. நாட்டின் தண்டனைச் சட்டங்களிலிருந்து சலுகை பெற்ற சிறப்பு வகுப்பை இது உருவாக்குகிறது.

மார்ச் 14 அன்று நடந்த தீ விபத்து மற்றும் பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து சாமானிய மக்களுக்கு பல கேள்விகள் எழுந்துள்ளன. மார்ச் 14 அன்று ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை? ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை? பணம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? ஏன் ஒரு புகார் கூட தயாரிக்கப்படவில்லை? குற்றவியல் சட்டம் ஏன் செயல்படுத்தப்படவில்லை?

நீதிபதி வர்மா தனது விளக்கத்தில், இது தனது பணம் அல்ல என்றும், அவர் ஒருபோதும் எந்தப் பணத்தையும் வைத்திருக்கவில்லை என்றும், இதனால் அவர் முழுமையாக அதிர்ச்சியடைந்துள்ளார் என்றும் கூறியுள்ளார். பின்னர் அவர் ஏன் போலீசில் புகார் அளிக்கவில்லை? அவரைப் பொய்யாக சிக்க வைக்கும் முயற்சி இது எனில் ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரவில்லை?

நீதித் துறையில் ஊழலைத் தடுக்கும் முயற்சியாக, காலாவதியான நீதித்துறை தரநிலைகள் மற்றும் பொறுப்புக்கூறல் மசோதா, 2010-ஐ மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்தது என்ன? > நீதிபதி வீட்டில் எரிந்து கருகிய பணம் கைப்பற்றப்பட்டது உறுதி: புகைப்படம், வீடியோ வெளியிட்டது உச்ச நீதிமன்றம்



Read More

Previous Post

சவேந்திர சில்வா, கருணா உள்ளிட்ட நால்வருக்கு தடை

Next Post

ஒரு ஃபோன் கால் ஏற்படுத்திய மாற்றம்.. இஷான் கிஷன் பகிர்ந்த சீக்ரெட்

Next Post
ஒரு ஃபோன் கால் ஏற்படுத்திய மாற்றம்.. இஷான் கிஷன் பகிர்ந்த சீக்ரெட்

ஒரு ஃபோன் கால் ஏற்படுத்திய மாற்றம்.. இஷான் கிஷன் பகிர்ந்த சீக்ரெட்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin