Last Updated:
சோயப் அக்தர், ஷேவாக் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஷேவாக் 2004 இல் பாகிஸ்தானுக்கு எதிராக டிரிபிள் சதம் அடித்தது குறித்து அக்தர் விமர்சித்தார்.
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடிகைகள் மந்திரா பேடி மற்றும் ஷகிபா பாலியுடன் விளம்பரம் ஒன்றில் ஷேவாக் நடித்திருந்தார். அதில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டிரிபிள் சதம் அடித்தது குறித்து பெருமையாக பேசப்பட்டிருந்தது. இந்த வீடியோவை மேற்கோள்காட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அக்தர், கடந்த 20 ஆண்டுகளாக 300, 300, 300 என்ற வார்த்தையை கேட்டு அலுத்துவிட்டதாக விமர்சித்தார்.
அதில், “விரு பாஜியின் வீடியோவைப் பார்த்தேன். அவர் பேசுவதைக் கேட்டு எனக்கு சலிப்பாக இருக்கிறது. கடந்த 20 வருடங்களாக ‘300, 300, 300’ என்ற அதே டேப் தான் ஒலிக்கிறது. நீங்கள் அந்த 300 ரன்கள் எடுத்தபோது நானும் அங்கே இருந்தேன். நீங்கள் மிகவும் நன்றாக விளையாடினீர்கள். சந்தேகமில்லை. ஆனால் இது நோன்பு மாதம். எனவே தயவுசெய்து, இப்போதே நிறுத்துங்கள்” என்று அக்தர் வீடியோவில் கூறியுள்ளார்.
Also Read | கார் ரேஸில் மீண்டும் அசத்திய நடிகர் அஜித்.. இத்தாலியில் மூன்றாமிடம் பிடித்து சாதனை!
கடந்த 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷேவாக் முச்சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 23, 2025 10:01 PM IST


