Last Updated:
இவரை அடிப்படை தொகையான ரூ. 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. இவர் 14 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கேரள அணியில் விளையாடியவர்.
இன்று நடைபெற்ற சென்னை – மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் ஸ்பின்னர் விக்னேஷ் புத்தூர் சென்னை அணியின் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார்.
23 வயதாகும் கேரளாவை சேர்ந்த விக்னேஷ் குறித்த தகவல்களை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் தேடி வருகின்றனர். இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்துகளில் 3 சிக்சர் 6 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.
இந்த போட்டியில் மும்பை அணியின் இளம் பவுலர் விக்னேஷ் புத்தூர் ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணிக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த விக்னேஷ் புத்தூரை இந்த மேட்ச்சில் இம்பேக்ட் ஆட்டக்காரராக மும்பை அணி களம் இறக்கியது. 23 வயதாகும் விக்னேஷ் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்.
இவரை அடிப்படை தொகையான ரூ. 30 லட்சத்திற்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. இவர் 14 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கேரள அணியில் விளையாடியவர்.
கேரளா கிரிக்கெட் லீக்கில் ஆலப்பே ரிப்பிள்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். தொடக்கத்தில் மீடியம் பேசராக இருந்தவர் பின்னாளில் சுழற்பந்து வீச்சாளராக மாறினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் கேரளா காலேஜ் ப்ரீமியர் டி20 லீக்கில் இடம்பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் ஐபிஎல்லுக்கு தேர்வாகியுள்ளார்.
March 23, 2025 11:04 PM IST


