Last Updated:
இந்திய மக்கள் சாதியவாதிகள் இல்லை, அரசியல்வாதிகள் சுயலாபத்திற்காக சாதியைப் பயன்படுத்துகிறார்கள் என்று நிதின் கட்கரி குற்றஞ்சாட்டினார்.
இந்திய மக்கள் சாதி பார்ப்பதில்லை என்று கூறியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அரசியல்வாதிகள் தான் தங்களது சுயலாபத்திற்காக சாதியைப் பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, வாக்கு வங்கி அரசியலுக்குப் பதிலாக, வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரும் வகையில், அரசியலை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்;தினார். அரசியல் என்பதை சுயவிளம்பரமாகப் பயன்படுத்தாமல், சமூக சேவையாகக் கருத வேண்டும் என்று கூறிய நிதின் கட்கரி, உண்மையான தலைவர்களுக்கு போஸ்டர் ஒட்டுவதோ, விளம்பரப்படுத்துவதோ தேவையில்லை என்றும் தெரிவித்தார். இந்திய மக்கள் சாதியவாதிகள் இல்லை என்றும், அரசியல்வாதிகள் தான் தேர்தலுக்காக சாதியைப் பயன்படுத்தி வருவதாகவும் சாடினார்.
மேலும் தேர்தல் பரப்புரைக்காக, அதிக அளவில் பணம் செலவழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த அவர், அரசியல் என்பது தேர்தலில் வெற்றி பெறுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
மேல்காட்புலிகள் காப்பகப் பகுதியில் சாலை அமைப்பதற்கு வனத்துறை சட்டம் தடையாக இருப்பதாக அதிகாரிகள் கூறிய நிலையில், பழைய சட்டவிதிகளைப் பின்பற்ற வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
March 23, 2025 10:56 AM IST
“இந்திய மக்கள் சாதி பார்ப்பதில்லை… அரசியல்வாதிகள் தான் சாதியைப் பயன்படுத்தி வருகிறார்கள்…” – நிதின் கட்காரி பேச்சு


