நிலக்கரி உற்பத்தியில் எட்டப்பட்டுள்ள சாதனைக்காக, நிலக்கரி சாா்ந்த பொதுத் துறை நிறுவனங்கள், தனியாா் துறையினா், 350-க்கும் மேற்பட்ட நிலக்கரி சுரங்கங்களில் பணியாற்றும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் ஆகியோருக்கு நிலக்கரி அமைச்சகம் பாராட்டு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் நிலக்கரி இறக்குமதி 8.4 சதவீதம் குறைந்துள்ளது. இதன் மூலம் ரூ.42,315 கோடி அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

