கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாட்டு சிறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்தியர்கள் குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “மலேசியா, குவைத், கத்தார் மற்றும் சவுதி அரேபியாவில் இதுபோன்ற மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
2024 ஆம் ஆண்டில், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் 3 பேருக்கும், ஜிம்பாப்வேயில் ஒருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
2023 ஆம் ஆண்டில், குவைத் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரு நாடுகளிலும் 5 பேருக்கும், மலேசியாவில் ஒருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது” என அமைச்சர் பதிலளித்தார்.

