கோலாலம்பூர்,
எஸ்எம்இ கார்ப் ஐ–பாப் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 சிறு- குறு நடுத்தர தொழில்முனைவோருக்கு நேற்று மொத்தம் 2.96 மில்லியன் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டது. இதன் தொடர்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டனர்.


இவர்களுக்கான காசோலையை தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ராமகிருஷ்ணன் வழங்கினார். நாட்டிலுள்ள இந்தியத் தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்கும் அவர்களின் தொழில் விரிவாக்கத்திற்கும் மடானி அரசாங்கம் பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வகையில் தம்முடைய அமைச்சின் கீழ் தெக்குன், ஸ்பூமி கோஸ்பிக், அமானா இக்தியார் மலேசியா, பென், பேங்க் ராக்யாட், பிரிம் ஐ திட்டங்களின் வழி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் சொன்னார்.
இத்திட்டங்களின் வழி இந்திய தொழில்முனைவோர் மிகப்பெரிய வெற்றிகளைப் பதிவு செய்து வருகின்றனர். சிறு – குறு – நடுத்தர தொழில்முனைவோர் இந்த வளர்ச்சியில், முன்னேற்றத்தில் விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் ஐ-பாப் திட்டம் அறிமுகம் நோகக்ததவக செய்யப்பட்டது என்று டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார். கோலாலம்பூர் சென்ட்ரலில் உள்ள எஸ்எம்இ கார்ப் தலைமையகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஐ-பாப் திட்டத்தின்கீழ் ஒரு லட்சம் ரிங்கிட் வரையிலான கடனுதவிக்கு புதிய தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்.


எண்டர்பிரைஸ் நிறுவனங்கள் வைத்திருக்கும் தொழில்முனைவோர் இந்த வாய்ப்பை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஐ-பாப் திட்டம் இந்திய தொழில்முனைவோர் மத்தியில் மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்று வரடவறத் இத்திட்டத்தின் கீழ் கடனுதவிக்கு வரும் ஏப்ரல் 7ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.


இதனிடையே இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய எஸ்எம்இ கார்ப் தலைமை நிர்வாக அதிகாரி சிஸால் பின் டத்தோ நைனி 2024ஆம் ஆண்டில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த 81 தொழில்முனைவோர் ஐ-பாப் திட்டத்தில் மனுக் செய்ததாகவும் இதற்கு 6 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எஸ்எம்இ கார்ப்பின் ஐ-பாப் திட்டத்தில் கடனுதவிக்கு விண்ணப்பம் செய்ய விரும்புகின்றவர்கள்
www.smecorp.gov.my என்ற அகப்பக்கத்தில் தகவல்களைப் பெறலாம்.


