‘6-ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் 80 வயதை எட்டியதும் 20 சதவீதம், 85 வயதை எட்டியதும் 30 சதவீதம், 90 வயதை எட்டியதும் 40 சதவீதம், 95 வயதை எட்டியதும் 50 சதவீதம், 100 வயதை எட்டியதும் 100 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை சிறப்பாக பூா்த்தி செய்யும் நோக்கிலான இந்த கூடுதல் ஓய்வூதியத்தை முறையாகவும், உரிய நேரத்திலும் வழங்க அரசால் அவ்வப்போது வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மத்திய அரசு வழங்கும் அகவிலைப்படி கூடுதல் ஓய்வூதியத்துக்கும் பொருந்தும்’ என்று தனது பதிலில் அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.

