Last Updated:
Sunita Williams Returns | நாசா விண்வெளி வீரர்கள் 286 நாட்களுக்கு பிறகு பூமி திரும்பிய போது, டால்பின்கள் அவர்களை வரவேற்றது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேர் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் புளோரிடாவில் தரையிறங்கினர்.
286 நாட்களுக்கு பிறகு பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்களை வரவேற்கும் விதமாக விண்கலத்தை சுற்றி டால்பின்கள் வட்டமடித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்காவின் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 286 நாட்கள் விண்வெளியிலேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இவர்களை அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் கடந்த சனிக்கிழமை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குச் சென்றது. இதையடுத்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் டிராகன் விண்கலம் பூமியை நோக்கி திரும்பினர். இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் புறப்பட்டது.
அதன்பின்னர், இன்று (புதன்கிழமை) அதிகாலை 2:41 மணிக்கு டிராகன் காப்ஸ்யூல் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகமாக நுழைந்தது. பின்னர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கடல் பகுதியில் அதிகாலை 3:27 மணியளவில் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேரும் தரையிறங்கினர்.
Also Read | 17 மணி நேர பயணம்.. மொத்தம் 4 நிலை.. சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக தரையிறங்கியது எப்படி?
பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் உட்பட 4 பேரையும் படகில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களும் 4 பேரும் உற்சாகத்துடன் கையசைத்தனர். தற்போது அவர்களால் நடக்க முடியவில்லை என்றாலும், ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள் எனச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, நால்வரும் பயணித்த டிராகன் கேப்சூல் படிப்படியாக வேகம் குறைந்து கடலில் விழுந்ததும், விண்வெளி வீரர்களை வரவேற்பது போல் கேப்சூலை சுற்றி டால்பின்கள் சூழ்ந்தன.
#JUSTIN சுனிதா வில்லியம்ஸ் வந்த டிராகன் விண்கலத்தை சுற்றி வட்டமிட்ட டால்பின்கள்#NASA #Astronauts #SunitaWilliams #Dolphin #SunitaWilliamsReturn #Space #Earth pic.twitter.com/kJVO5eaGjN
— News18 Tamil Nadu (@News18TamilNadu) March 19, 2025
விண்கலம் கடலில் விழுந்தபோது, அதைச் சுற்றி பல டால்பின்கள் மேற்புறத்தில் நீந்திக் கொண்டிருந்தது கேமராக்களில் தெளிவாக தெரிந்தது. இதனை லைவ் செய்துகொண்டிருந்த நாசா விஞ்ஞானிகள் அது மீட்புக் குழுவுக்குக் கிடைத்த பெருமை என்று கூறினர்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 19, 2025 7:03 AM IST


