இத்தகைய சூழலில், ஜான் கென்னடியின் கொலை தொடர்பான சுமார் 80,000 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை அரசு நிர்வாகம் வெளியிடுமென்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், இது தொடர்பாக தேசிய ஆவணக் காப்பகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ஆவணங்கள் தங்கள் ஆன்லைன் பக்கத்திலும் காணக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 60 வருட கொலை வழக்கின் ஆவணங்களை ட்ரம்ப் அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது.
ஆனால், சரியாக எத்தனை ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது என்று சரியாகத் தெரியவில்லை. அதோடு, அனைத்து ஆவணங்களும் ஆன்லைனில் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், வல்லுநர்கள் ஒருபக்கம் வெளியான ஆவணங்களை ஆராய்ந்து வருகின்றனர். முழுமையாக ஆராய்ந்து முடிக்க நிறைய நேரம் தேவைப்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே, ஆவணங்கள் முழுமையாக ஆராயப்பட்ட பிறகுதான் 60 ஆண்டுக்கால கொலை வழக்கின் உண்மை என்னவென்பது தெரியவரும்.
அமெரிக்க வரலாற்றில், அதிபர் பதவியிலிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்ட ஒரே அதிபர் ஜான் கென்னடி மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

