Last Updated:
பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், JioHotstar நிகழ்ச்சியில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக IPL கோப்பையை வெல்லும் இலக்கை பற்றி பேசினார். 2008-ல் 14 வயதில் ball boy அனுபவத்தை நினைவு கூர்ந்தார்.
கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு கோப்பையை வென்று தந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய உள்ளார். நடப்பு ஐபிஎல் கோப்பையில் தனது இலக்கு குறித்து அவர் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.
Superstars on JioHotstar நிகழ்ச்சியில் பேசிய பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், தனது இலக்கை குறித்து பேசினார். அதில், “நான் ஏலத்தில் தேர்வான தருணத்திலிருந்தே என் நோக்கம் தெளிவாக இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் இன்னும் IPL கோப்பையை வெல்லவில்லை, எனவே அதை வெல்லச் செய்வதே என் முக்கிய இலக்கு. இது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாக இருக்கும். மேலும் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்து, கொண்டாட ஒரு காரணம் வழங்க விரும்புகிறேன்.
தனது முதல் IPL அனுபவத்தைக் கூறிய ஷ்ரேயாஸ், 2008-ம் ஆண்டு, 14 வயதிலிருந்தபோது வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ் – RCB போட்டியில் Ball Boy Mf இருந்ததை நினைவு கூர்ந்தார். “நான் தெரு கிரிக்கெட்டில் வளர்ந்தேன், அந்த நேரத்தில் மும்பை அணி U-14 அணிக்காக விளையாடினேன். அதனால், எங்களை எல்லாரையும் ball boys ஆக தேர்வு செய்தனர்.
இது IPL-ஐ நெருக்கமாக அனுபவிக்கும் முதல் தருணம். ஆரம்பத்தில் தயக்கமாக இருந்தேன், ஆனால் நண்பர்கள் வீரர்களிடம் பேசுவதை பார்த்தவுடன் நானும் முயற்சி செய்தேன். ராஸ் டெய்லர் என் விருப்பமான வீரர், எனவே அவரிடம் சென்று ‘சார், நான் உங்களின் பெரிய ரசிகன்’ என்று கூறினேன். அவர் மிக இனிமையாக ‘நன்றி’ கூறினார். அப்போது பேட் அல்லது கையுறைகளை கேட்பது வழக்கமானது, ஆனால் நான் மிகவும் தடுமாறினேன், கேட்டிருக்கலாம் என்பதே இன்று வரையிலும் என் மனதில் உள்ளது!”
கிரிக்கெட் கமெண்டரியில் பிராந்திய மொழிகளின் பயன்பாட்டைப் பற்றிப் பேசும்போது, “நாங்கள் அதை ரசிக்கிறோம். கிரிக்கெட்டில் ஆரம்பத்தில் இருந்தே டிரெஸிங் ரூமில் எங்கள் சொந்த மொழியில் பேசுவோம். மும்பையில் கூட, சில ஷாட்களுக்கு வேறு பெயர்கள் வைத்திருப்போம். ஒவ்வொரு ஷாட்டுக்கும் தத்தம் சொந்த விளக்கம் இருக்கும். முதன்முதலாக தாய் மொழியில் கமெண்ட்ரி கேட்கும் போது சற்று குழப்பமாக இருக்கும். ‘வாவ், கிரிக்கெட்டில் இப்படி சொல்லலாமா?’ என்று ஆச்சரியப்படவும் வைக்கும் என்று அவர் கூறினார்.
March 19, 2025 3:44 PM IST


