Last Updated:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் அறிமுகமானார்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 53 சதங்கள் அடித்தும் அந்த வீரரை ஐபிஎல் அணிகள் எதுவும் ஏலத்தில் எடுக்கவில்லை. அவர் மீது முதலீடு செய்ய அனைத்து அணிகளும் தயக்கம் காட்டின. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அந்த வீரர் குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவதற்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மேடை அமைத்து வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சிறந்த வீரர்களை தேர்வு செய்யக்கூடிய களமாகவும் பார்க்கின்றன.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 53 சதங்களும் 6 இரட்டை சதங்களும் அடித்து ஒட்டுமொத்தமாக 19,831 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் ஜோ ரூட் நடைபெற்று முடிந்த ஏலத்தில் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டார். ஐபிஎல் 18வது சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், ஜோ ரூட் குறித்த தகவல்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அவர் அறிமுகமானார். மொத்தமே 3 போட்டிகளில் விளையாடிய அவர் ஒருமுறை மட்டுமே பேட்டிங் செய்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 10 ரன்கள் எடுத்தார். 2024 சீசனில் அவர் விளையாடாத நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் முக்கிய பங்கு வகிப்போம் என்று அவர் கருதினார்.

ஜோ ரூட்
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக அவரை ஏலத்தில் எடுப்பதற்கு எந்த ஒரு அணி நிர்வாகமும் முன்வரவில்லை. சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடி இருந்தாலும், டி20 போன்ற அதிவேக ரன் குவிக்கும் களங்களில் அவர் மெதுவாக விளையாடுவார் என்ற எண்ணம் அனைத்து அணி நிர்வாகத்திலும் காணப்படுகிறது.
அடுத்து வரும் போட்டிகளில் அவர் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு அவர் வாங்கப்படலாம் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.
March 18, 2025 10:17 PM IST


