Last Updated:
வெளிநாடுகளில் இருந்து உணவு பதார்த்தங்களை கொண்டு வருவதற்காக 100 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. விருந்தினர் தங்குவதற்காக பாலைவனத்தில் தற்காலிகமாக நகரம் ஏற்படுத்தப்பட்டது.
உலகிலேயே அதிக செலவுடன் நடந்த விருந்து ஒன்று வரலாற்றில் இடம் பிடித்தது. இந்த விருந்து காரணமாக ஆட்சி மாற்றமே ஒரு நாட்டில் ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.
விருந்து என்பது உலக நாடுகள் அனைத்திலும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு விரும்பத்தக்க நிகழ்ச்சியாகும். நல்ல விஷயங்கள் நடக்கும் போது விருந்து கொடுப்பது என்பது பல நாடுகளில் வழக்கமாக உள்ளது. திருமண விருந்து, பிறந்தநாள் விருந்து உள்ளிட்ட பல மகிழ்ச்சிகரமான நாளில் விருந்துகள் வைக்கப்படுகின்றன. அரசர் காலம் முதல் தற்போது வரை இந்த வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
இதன் மூலம் ஒருவருக்கொருவர் அன்பும் இணக்கமும் ஏற்படுகிறது. சர்வதேச நாடுகளின் தலைவர்கள் விருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் போது அது நாட்டின் நலனுக்கு உதவிகரமாக அமையும். அந்த வகையில் உலகிலேயே அதிக செலவு மிக்க விருந்து ஒன்று நடந்துள்ளது. அதற்கு இப்போதைய மதிப்பின்படி சுமார் 850 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் 1971 ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியாளர் முகமது ரசா ஷா என்பவர் இந்த விருந்தை நடத்தினார். இதில் 65 நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 1941 ஆம் ஆண்டு முகமது ரசா ஷா ஆட்சி பொறுப்புக்கு வந்தார். பாரசீகப் பேரரசின் 2500 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் அவர் விருந்து நிகழ்ச்சியை நடத்தினார். இந்த விருந்தில் 18 டன் எடை கொண்ட உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
உலக அளவில் சிறப்பாக உள்ள உணவு பதார்த்தங்கள், மதுபானங்கள் உள்ளிட்டவை இந்த விருந்தில் இடம்பெற்றது. இதற்காக மட்டும் வெளிநாடுகளில் இருந்து உணவு பதார்த்தங்களை கொண்டு வருவதற்காக 100 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. விருந்தினர் தங்குவதற்காக பாலைவனத்தில் தற்காலிகமாக நகரத்தையே முகமது ஷா ஏற்படுத்தினார்.
இதையும் படிங்க – ரூ.15 கோடி பட்ஜெட்.. உலகளவில் ரூ.905 கோடி வசூல் சாதனை படைத்த படம்.. எது தெரியுமா?
உலக வரலாற்றில் அதிக செலவை ஏற்படுத்திய விருந்து என்பதாக இந்த விருந்து வரலாறு படைத்தது. இருப்பினும் இந்த ஆடம்பர செலவு காரணமாக அவர் ஈரான் நாட்டு மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தார். தொடர்ந்து வெடித்த போராட்டங்கள் காரணமாக 1979 ஆம் ஆண்டு அவர் ஆட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
March 17, 2025 7:09 PM IST
65 நாட்டு விருந்தினர்கள்.. ரூ. 850 கோடி வரை செலவு.. உலகிலேயே காஸ்ட்லியான விருந்து நிகழ்ச்சி இதுதான்!!


