பிரதமர் மோடியின் சமீபத்திய பாட்காஸ்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான உறவு, உலக அரங்கில் இந்தியாவின் இடம் மற்றும் சீனா உடனான உறவுகள் பற்றி பேசியுள்ளார்.
“எந்த நாடும் தனியாக இருக்க முடியாது’
உலக விவகாரங்களில் இந்தியாவின் தாக்கம் குறித்து உரையாடப்பட்டது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை ஆதிக்கத்தை தேடாமல், நாகரீக நெறிமுறைகளால் வழிநடத்தப்படுகிறது எனக் கூறியுள்ளார்.
உக்ரைன் போர், மத்திய கிழக்கு போர்கள், அமெரிக்கா-சீனா என உலக நாடுகள் இடையிலான சிக்கல்கள் குறித்து, “ஒவ்வொரு நாட்டின் வரம்புகளையும் கோவிட் அம்பலப்படுத்தியது. அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கு பதிலாக, உலகம் துண்டு துண்டாகிவிட்டது.” எனக் கூறியுள்ளார்.
ஐ.நா போன்ற உலக நிறுவனங்களின் தோல்வியை சுட்டிக்காட்டி, “நிலைத்தன்மையை பேணுவதற்கான நிறுவனங்கள் (ஐ.நா), உலக நாடுகளுடன் இணக்கத்தை இழந்துவிட்டன.” என்றார்.
நாடுகள் தங்களை விரிவாக்கம் செய்துகொள்ளும் கொள்கையிலிருந்து, ஒத்துழைப்புக்கு நகர வேண்டும் என்றவர், “உலகம் சுதந்திரமானது. எந்த நாடும் தனியாக இருக்க முடியாது. முன்னேறுவதற்கான ஒரே பாதை அமைதியும் வளர்ச்சியும் மட்டுமே” எனப் பேசியுள்ளார்.

