அமெரிக்கா கொடியிட்ட வணிகக் கப்பல் பாதுகாப்பாக செங்கடல், சூயஸ் கால்வாய், ஏடன் வளைகுடா வழியில் சென்று கிட்டதட்ட ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்டது. நான்கு மாதங்களுக்கு முன்பு செங்கடல் வழியாக அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி பல முறை தாக்குதல் நடத்தியது.
இனி அமெரிக்கா கப்பல்கள் மீதான ஹவுதியின் தாக்குதல்கள் பொறுத்துக்கொள்ளப்படமாட்டது. எங்களுடைய கொள்கையை அடையும் வரை தாக்குதல்கள் தொடரும்.
ஹவுதி தீவிரவாதிகளே, உங்களுடைய நேரம் முடிந்துவிட்டது, உங்கள் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும். அது இன்றிலிருந்து தொடங்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் இதுவரைக்கும் கண்டிராத அளவுக்கு நரகம் உங்கள் மீது மழை பொழியும்.
ஈரானுக்கு: ஹவுதிக்கு நீங்கள் ஆதரவளிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையென்றால், உங்களிடம் அமெரிக்கா அன்பாக நடந்துக்கொள்ளாது” என்று எச்சரித்து பதிவிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம், ஏமன் ஹவுதிகளோ, ‘இதற்கு பதிலடி தராமல் இருக்கமாட்டோம்’ என்று இந்தத் தாக்குதலுக்கு பதிலளித்துள்ளனர்.

