கேள்வி:- செங்கோட்டையன் அநாகரீகமாக நடந்து கொள்வதாக வைகை செல்வன் கூறி உள்ளாரே?
நாகரீகம், அநாகரீகம் பற்றியெல்லாம் அண்ணன் செங்கோட்டையனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம். அவர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர். 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சியில்தான் பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதா அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அத்திட்டத்திற்கு பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தபோது, அதில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் இருந்தது. அது செங்கோட்டையனுக்கு வருத்தம் தந்தது. செங்கோட்டையனை தூண்டிவிடுவதற்காக நான் பேசவில்லை. செங்கோட்டையன் எதற்காக வருத்தப்பட்டாரோ, அது அனைவரின் வருத்தமும் கூட. அதிமுகவில் உள்ள 90 சதவீதம்பேரின் மன ஓட்டத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்.

