இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வது வரையறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டில் தற்போது 4 முதல் 5 மில்லியன் முட்டைகள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர கூறியுள்ளார்.
அத்துடன், நாளாந்தம் சதொச ஊடாக ஐந்து இலட்சம் முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 43 ரூபாய் எனவும், முட்டை கையிருப்பு போதுமானதாக இருப்பதனால் இறக்குமதி வரையறுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

