தமிழ்நாட்டைப் போலவே, இலங்கையிலும் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டதை அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடங்கி வைத்தார். ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை என்ற திட்டத்தின் கீழ், காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 9 ஆயிரத்து 134 பள்ளிகளில் 16 லட்சம் மாணவ மாணவியர் காலை உணவுத் திட்டத்தில் பயன் அடைவர்.
காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அளிக்கப்படும் காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், தினசரி வருகை விகிதத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்க்கவும், கல்வியில் செயல் திறனை உயர்த்தவும் பள்ளி உணவுத் திட்டம் பயன்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டம்
இந்தத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…