7வது ஊதியக் குழு: 4 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைத்த சில நாட்களுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 30 அன்று மற்றொரு நல்ல செய்தி காத்திருக்கிறது. சமீபத்திய உயர்வுக்குப் பிறகு, டிஏ 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. ஜனவரி 2024 முதல் இது அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு வெளியானதில் இருந்து, ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத நிலுவைத் தொகைக்கு உரிமை உண்டு. ஜாக்ரன் அறிக்கையின்படி, மத்திய அரசு ஊழியர்கள் தங்களது உயர்த்தப்பட்ட சம்பளம் மற்றும் இரண்டு மாத நிலுவைத் தொகையை மார்ச் 30ஆம் தேதி பெறுவார்கள்.
நடப்பு 2023-24 நிதியாண்டின் கடைசி நாளான மார்ச் 31ஆம் தேதி அன்று வங்கிகளைத் திறந்திருக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த அறிக்கை வந்துள்ளது.
Also Read |
பெண் பிள்ளைகளின் எதிர்காலம் காக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்! வட்டி விவரம் இங்கே!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியானது தொழில்துறை தொழிலாளர்களுக்கான (CPI-IW) சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI) அடிப்படையிலானது. 7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஃபார்முலாவின்படி DA உயர்வு அங்கீகரிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…