வன நட்சத்திரம் என்று அர்த்தம் கொண்ட வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை இணைந்து தொடங்கியுள்ளது. இதனை ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி நிர்வகித்து வருகிறார்.
குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த வந்தாரா பரந்து விரிந்து காணப்படுகிறது. இதற்குள் வன விலங்குகளுக்கான மருத்துவமனைகள், உடல் நல மையம் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
வந்தாராவின் சேவைகளை அங்கீகரித்துள்ள மத்திய அரசு அதற்கு பிராணி மித்ரா என்ற உயரிய விருதை வழங்கி கவுரவித்துள்ளது. வந்தாரா விலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையத்தில் 1 லட்சம் சதுர அடி அளவில் மருத்துவமனையும், ஆய்வு மையமும் உள்ளன. இங்கு ஐசியு, MRI, CT Scan, X-Ray, அல்ட்ரா சண்ட், எண்டோஸ்கோப்பி, டென்டல் ஸ்கேலர் உள்ளிட்ட நவீன மருத்துவ வசதிகள் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் வந்தாராவுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு விலங்குகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து நேரில் பார்த்து அறிந்து கொண்டார்.
அதை தொடர்ந்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் புகைப்பட பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்போது வந்தாரா குறித்து அறிவதற்கு பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் எப்படி அப்டேட்டுகளை பெறலாம் என்று கேட்கத் தொடங்கியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் @vantara என்ற பக்கத்தை பின் தொடர்வதன் மூலம் வந்தாரா குறித்த சமீபத்திய தகவல்களை பெற முடியும்.
இதேபோன்று எக்ஸ் தளத்தில் @ril_foundation என்ற கணக்கை பின் தொடர்வதன் மூலம் அப்டேட்டுகளை எளிதாக பெறலாம்.
At Vantara, every effort is dedicated to providing a safe haven for endangered species while fostering ecological sustainability. We are committed to protecting and preserving wildlife through rescue, rehabilitation, and conservation. Together, we strive for a future where humans… https://t.co/gj3BSLqcdp
— Reliance Foundation (@ril_foundation) March 4, 2025
இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு விலங்குகள் அமைப்புடன் இணைந்து வந்தாரா செயல்பட்டு வருகிறது. இதனால் வந்தாராவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைப்பதுடன், இந்தியா மீதான நன்மதிப்பும் உயர்ந்து வருகிறது
March 04, 2025 9:20 PM IST

