Last Updated:
போப் பிரான்சிஸுக்கு மீண்டும் மூச்சுக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டதால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவர் ரோமில் ஜெமிலியா மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
போப் பிரான்சிஸின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது போப் பிரான்சிஸுக்கு ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதால், மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
கத்தோலிக்கத் தலைவரான போப் பிரான்சிஸ் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 14ஆம் தேதி ரோமில் உள்ள ஜெமிலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 வாரத்தில் இரண்டு முறை நிமோனியாவால் பாதிக்கப்பட்ட போப்புக்கு,
ஆக்சிஜன் உதவியோடு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், செயற்கை சுவாசத்தின் உதவியின்றி அவர் இயல்பாக சுவாசித்ததோடு, அவராகவே காலை உணவு எடுத்துக்கொண்டதாகவும், சிறிது காபி அருந்தியதாகவும் வாடிகன் தேவாலயம் தெரிவித்தது.
இந்நிலையில், போப் பிரான்சிஸுக்கு நேற்று ஒரே நேரத்தில் மூச்சுக் குழாயின் 2 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால், அவருக்கு மீண்டும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாக வாடிகன் குறிப்பிட்டுள்ளது.
March 04, 2025 7:38 AM IST


