Last Updated:
விதர்பா அணி ரஞ்சிக்கோப்பை இறுதியில் 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 3 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய ரஞ்சிக்கோப்பையின் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற கேரள அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் விதர்பா அணி 379 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக டேனிஷ் மாலேவார் 153 ரன்களும், கருண் நாயர் 86 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய கேரள அணி முதல் இன்னிங்சில் 342 ரன்கள் குவித்திருந்தது. இதில் அதிகபட்சமாக சச்சின் பேபி 98 ரன்களும், ஆதித்ய சர்வதே 79 ரன்களும் குவித்தனர்.
இதையடுத்து, 37 ரன்கள் முன்னிலையைத் தொடர்ந்து ஆட்டத்தின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை விதர்பா அணி இரண்டாம் இன்னிங்சில் 375 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 135 ரன்களும், டேனிஷ் மாலேவார் 73 ரன்களும் எடுத்தனர்.
இதனால், கேரள அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடியாததால் போட்டி டிராவில் முடிந்தது. எனினும் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையின் அடிப்படையில் விதர்பா அணி 3 ஆவது முறையாக கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய டேனிஷ் மாலேவார் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
March 02, 2025 10:21 PM IST


