Last Updated:
டெல்லியைச் சேர்ந்த சீதாராம் மற்றும் திவான் சந்த் ஆகிய தம்பதிகள் வழங்கி வரும் அற்புதமான சுவையானது, டெல்லிவாசிகளின் இதயங்களை மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களையும் கவர்ந்துள்ளது.
நீங்கள் டெல்லிக்குச் சென்றால், நகரத்தின் ஒவ்வொரு தெரு உணவையும் ருசிக்காமல் இருக்க மாட்டீர்கள். தேசிய தலைநகரமான டெல்லி, பல்வேறு உணவு வகைகளைக் கொண்டுள்ளது. இது சுவை மற்றும் நறுமணத்திற்கு பெயர் பெற்றது. இன்னும் சொல்லப்போனால், டெல்லியின் தெரு உணவைப் பற்றி நாம் பேசும்போது, ”சோலே பத்தூரே” பற்றி தான் நம் நினைவுக்கு வரும். இந்த அற்புதமான சுவையை சீதாராம் மற்றும் திவான் சந்த் ஆகிய தம்பதிகள் வழங்கி வருகின்றனர். இந்த சுவையானது டெல்லிவாசிகளின் இதயங்களை மட்டுமின்றி, நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களையும் கவர்ந்துள்ளது.
1955ஆம் ஆண்டில், சீதாராம் மற்றும் திவான் சந்த் ஆகியோர் பஹர்கஞ்ச் டிஏவி பள்ளியின் முன்பு, சூடான மற்றும் சுவையான சோலே பத்தூரை விற்பனை செய்வதன் மூலம் தங்கள் வியாபாரத்தை தொடங்கினர். பள்ளியின் முன்பு சைக்கிள்களை நிறுத்தி, சோலே பத்தூரை பள்ளி குழந்தைகளுக்கு விற்பனை செய்து வந்தனர். இப்படித்தான் இருவரும் 15 வருடங்களை கழித்தனர். பின்பு 1970ஆம் ஆண்டில், அவர்களது “சோலே பத்தூரே” மிகவும் பிரபலமானது.
இதனையடுத்து இருவரும் இம்பீரியல் சினிமா ஹாலுக்கு எதிரே ஒரு சிறிய கடையைத் திறந்தனர், இது அவர்களுடைய வியாபாரத்திற்கு ஊக்கத்தை அளித்தது. சினிமாவுக்கு வருபவர்களில் பெரும்பாலானோர், இந்த சோலே பத்தூரை வாங்கி சாப்பிட கடைகளில் குவிந்திருப்பார்கள். மேலும், புது டெல்லியின் ரயில் நிலையத்திற்கு அருகில் இருப்பதால் இப்பகுதி ஒரு வணிக மையமாக உருவெடுத்தது.
அதைத் தொடர்ந்து, சீதாராம் மற்றும் திவான் சந்த் ஆகியோரின் சோலே பத்தூரை அதிகமான மக்கள் சாப்பிட தொடங்கினர். பின்னர் 2008ஆம் ஆண்டில், சீதாராம் மற்றும் திவான் சந்த் குடும்பத்தின் பேரக்குழந்தைகளான, ராஜீவ் கோஹ்லி மற்றும் உத்சவ் கோஹ்லி ஆகியோர் பிடம்புரா, பாஸ்சிம் விஹார் மற்றும் குருகிராம் ஆகிய இடங்களில் புதிய கிளைகளை திறப்பதன் மூலம் வியாபாரத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் தற்போது, புனித் கோஹ்லியின் தலைமையில், வியாபாரம் டிஜிட்டல் யுகத்தில் நுழைந்துள்ளது. மேலும் அதிகமான வாடிக்கையாளர்களையும், உணவுப் பிரியர்களையும் சென்றடைகிறது. புதிய கிளையின் மூலம் இந்த சுவை பல்வேறு பகுதிகளுக்கும் சென்றடைந்ததோடு மட்டுமல்லாமல், உணவு பிரியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து, மக்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிக்க: PM Kisan திட்டத்தின் 19வது தவணையை வெளியிட்ட பிரதமர் மோடி… ஆன்லைனில் பயனாளிகளின் நிலையை சரிபார்ப்பது எப்படி?
உணவின் தரம் மற்றும் கடையின் மீது வாடிக்கையாளர்களின் முழு நம்பிக்கை காரணமாக சீதாராம் அவர்களின் உணவுக் கடை இன்றும் சிறப்பாக உள்ளது. சீதாராம் தற்போது உயிருடன் இல்லாவிட்டாலும், அவரது வாரிசுகள் இந்த உணவுக் கடையின் மூலம் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
February 26, 2025 2:12 PM IST
சைக்கிளில் உணவு விற்பனை செய்வதன் மூலம் தொடங்கிய வியாபாரம்… பல கோடி மதிப்பிலான சாம்ராஜ்ஜியமாக வளர்ந்தது…!


