Last Updated:
வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட யூபிஐ ஐடியை பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணத்தை தவிர்க்க முடியும். கட்டணத்தை செலுத்தும் முன்பாக பேமெண்ட் வழிமுறைகளை பார்க்க வேண்டும்.
யு.பி.ஐ. முறையில் பணப்பரிமாற்றம் நடைமுறைக்கு சேவைக்கு யூபிஐ தளங்கள் பெரும்பாலும் கட்டணம் வசூலிப்பது கிடையாது. கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ தளங்களில் மின் கட்டணம் செலுத்துவது ரீசார்ஜ் செய்வது உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் வரும் 1-ஆம் தேதி முதல் சில சேவைகளுக்கு சில யுபிஐ தளங்கள் சேவை கட்டணம் பெற உள்ளது. இந்த கட்டணம் 0.5% முதல் 1 சதவீதம் வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. யுபிஐ சேவையில் முதலிடம் வகிக்கக்கூடிய முன்னணி தளமாக செயல்படும் கூகுள் பே-யை பயன்படுத்தி மின் கட்டணம் முதல் போன்களுக்கான ரீசார்ஜ் வரை என ஏராளமான பில்களை செலுத்திக் கொள்ளலாம்.
இந்நிலையில் கிரெடிட் கார்டுகள் மூலம் யுபிஐ தளங்களை பயன்படுத்தி செலுத்தப்படும் பில்களுக்கு சேவை கட்டணம் விதிக்கப்பட உள்ளது. ஆனால் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து பண பரிவர்த்தனை செய்யும் போது அதற்கு சேவை கட்டணம் வசூலிக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூடுதல் கட்டணத்தை தவிர்ப்பதற்கு பின்வரும் சில வழிமுறைகளை கையாளலாம். வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட யூபிஐ ஐடியை பயன்படுத்தும் போது கூடுதல் கட்டணத்தை தவிர்க்க முடியும். கட்டணத்தை செலுத்தும் முன்பாக பேமெண்ட் வழிமுறைகளை பார்க்க வேண்டும். அதில் நமக்கு சௌகரியமான தளத்தில் பணத்தை செலுத்தலாம்.
சில வங்கிகள் ஆட்டோ பேமென்ட் முறையை வைத்துள்ளன. இதன் மூலம் செலுத்தப்படும் பில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி பில்களை செலுத்துவதை தவிர்ப்பதன் மூலம் கூடுதல் கட்டணங்களை தவிர்க்கலாம். இதே போன்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI) UPI மூலம் ஆயுள் மற்றும் உடல்நல காப்பீட்டு கொள்கைகளுக்கான தொகையை தடுப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க – நிலம், வீட்டை பதிவு செய்கிறீர்களா..? இந்த புதிய விதிகளை தெரிந்து கொள்வது அவசியம்..!
இதன் அடிப்படையில் காப்பீட்டு பாலிசி வழங்கிய பின்னரே பாலிசிதாரிடம் இருந்து காப்பீட்டாளருக்கு பணப்பரிமாற்றம் நடத்தப்படும். இந்த வசதியை செயல்படுத்தும் போது குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனைக்கான தொகையை பயனர்கள் தடுத்து வைக்க முடியும். இதனால் தேவையான நேரங்களில் நமக்கு நிதி கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
February 25, 2025 10:04 AM IST


