பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சந்தோஷ் கங்வாா் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜாா்க்கண்ட் ஆளுநராக உள்ளாா். கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜாா்க்கண்ட் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவின் தீவிர பிரசாரத்தையும் மீறி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

