Last Updated:
தேசிய மகளிர் தினத்தில் தனது சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிருக்கு வழங்க உள்ளதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் தினத்தில் தனது சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிருக்கு வழங்க உள்ளதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
அந்த வகையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 119வது எபிசோடில் பேசிய பிரதமர் மோடி, விண்வெளித் துறையில் நாடு சீரிய முறையில் வளர்ச்சி அடைந்து வருவதாகத் தெரிவித்தார். அண்மையில் இஸ்ரோ தனது 100வது ராக்கெட்டை ஏவியது, சந்திரயான் திட்டம், ஆதித்யா எல்1, மங்கல்யான் உள்ளிட்ட முக்கியத்தக்க சாதனைகளை பிரதமர் மோடி பட்டியலிட்டார்.
அடுத்த சில நாட்களில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களுக்கு அருகில் உள்ள அறிவியல் ஆய்வகங்கள், கோளரங்கம், அறிவியல் மையங்களுக்குச் சென்று ஒரு நாளை கழிக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார். பிரான்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் தலைமை வகித்தது குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி, அத்துறையில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து உலக நாடுகள் பாராட்டியதாகக் கூறினார்.
உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டு போட்டி குறித்து பேசிய பிரதமர் மோடி, 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமையை நிரூபித்ததாகக் கூறினார்.
February 23, 2025 2:58 PM IST
சமூக வலைதள பக்கங்களை நிர்வகிக்கும் பொறுப்பை மகளிருக்கு வழங்க உள்ளேன் – மனதின் குரலில் பிரதமர் மோடி


