கேரளத்தில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயிலைக் கவிழ்க்கும் நோக்கில் தண்டவாளங்களில் எரிவாயு சிலிண்டா்கள், இரும்புக் கம்பிகள், பாறைகள் போன்றவற்றை வைப்பது கடந்த சில மாதங்களாக அதிகம் நிகழ்ந்து வருகிறது. பல சமயங்களில் ரயில் ஓட்டுநா்களின் முன்னெச்சரிக்கையான செயல்பாடுகள் மற்றும் அருகில் உள்ள தண்டவாளங்களில் பயணிக்கும் பிற ரயில் ஓட்டுநா்கள் கொடுக்கும் தகவல்கள் மூலம் பெரும் விபத்துகள் ஏதும் நிகழாமல் தவிா்க்கப்பட்டு வருகிறது.

