Last Updated:
ஏழுமலையான் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் ரயில் பயணத்திற்கு அடுத்தபடியாக விமானப் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் திருப்பதி விமான நிலையத்திற்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன.
திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றாகும். ஏழுமலையான் கோவிலுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் ரயில் பயணத்திற்கு அடுத்தபடியாக விமானப் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இதனால் திருப்பதி விமான நிலையத்திற்கு தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன.
டெல்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களிலிருந்தும் திருப்பதிக்கு நேரடி விமான சேவை உள்ளது. திருப்பதியைச் சுற்றியுள்ள தொழில் நகரங்களையும் இந்த விமான நிலையம் இணைக்கிறது. சமீபத்தில் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட திருப்பதி விமான நிலையத்தில் தற்போது 2,285 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை 3,810 மீட்டராக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சுமார் ரூ.153.16 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவாக்கப் பணிகள் குறித்து விமான நிலைய இயக்குநர் மானே ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “புதிய ஓடுபாதை போயிங் 777 மற்றும் ஏர்பஸ் 330 போன்ற அகலமான விமானங்களைத் தரையிறக்கும் வசதியை ஏற்படுத்தித் தரும். DVOR, DME போன்ற நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்தைக் கையாளும் திறன் ஒரு நாளைக்கு 100 விமானங்களில் இருந்து 200 விமானங்களாக அதிகரிக்கும்.
இதையும் படிக்க: பிரதமர் மோடியின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்ட சக்தி காந்ததாஸ்..! காரணம் என்ன தெரியுமா?
குறைந்தபட்சத் தெரிவுநிலைத் தேவையும் 1500 மீட்டரிலிருந்து 700 மீட்டராகக் குறைக்கப்பட்டுள்ளது. சறுக்கு கோணம் 3.2 டிகிரியிலிருந்து 3 டிகிரிக்கு சரிசெய்யப்பட்டது அனைத்து வானிலையிலும் மென்மையான Landings-க்கு உதவும்.” எனக் கூறியுள்ளார். 2,285 மீட்டர் ஓடுபாதையின் ஒரு பக்கம் 240 மீட்டரும் மறுபுறம் 1,285 மீட்டரும் நீட்டிக்கப்பட்டு மொத்த நீளம் 3,810 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் AAI-இயக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மிக நீளமான ஓடுபாதை கொண்ட விமான நிலையம் என்ற பெருமையை திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையம் பெற்றுள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த விமான நிலையம் விரைவில் சர்வதேச விமான சேவைகளை வரவேற்கத் தயாராக உள்ளது. இதன்மூலம் ஆந்திர மாநிலத்தின் சுற்றுலா, தொழில் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
February 23, 2025 3:23 PM IST


