மதுபானம் மற்றும் சிகரட் வகைகளின் விலை அதிகரிக்கப்படாது என மதுவரித் திணைக்களத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் மதுபானம் மற்றும் சிகரட் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், வரவு செலவுத் திட்டத்தில் மதுபானம் மற்றும் சிகரட் விலைகள் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
வரவு செலவுத் திட்டம்
இந்நிலையில், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மதுபானம் மற்றும் சிகரட் வகைகளின் மீண்டும் விலை அதிகரிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 11ஆம் திகதி மதுபான வகைகள் லீற்றர் ஒன்றின் விலை 6 வீதத்தினாலும் சிகரட் வகைகளின் விலை 5 முதல் 10 ரூபாவினாலும் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

