தொடரும் வெப்பமான வானிலை குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று(17.02.2025) மாலை வெளியிடப்பட்ட அறிவிப்பிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வெப்பமான வானிலை நாளை (18) வரை நீடிக்குமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வெப்பமான வானிலை
அதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும், முடிந்தவரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும் எனவும் சிறு குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |